டெஸ்ட் போட்டியில் மீண்டும் விளையாட சம்மதம் தெரிவித்த மொயீன் அலி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் விளையாட முடிவு
Jun 7 2023 5:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக தான் அறிவித்த முடிவை மொயீன் அலி வாபஸ் பெற்றுள்ளார். ஒயிட்பால் கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்துவதற்காக கடந்த 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து மொயீன் அலி விலகினார். இது இங்கிலாந்து அணிக்கு மிகப் பெரிய இழப்பாகவே இருந்து வந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் மொயீன் அலியை விளையாட வைப்பதற்காக அவரது முடிவை திரும்ப பெற வேண்டும் என்று அவரிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. மேலும் கடந்த ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில் மொயீன் அலி மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மொயின் அலி சேர்க்கப்பட்டுள்ளார்.