ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விராட் கோலி ரூ.30 கோடி நன்கொடை : அதிகாரப்பூர்வ தகவல் இல்லாத நிலையில் வதந்தியாக இருக்கலாம் என சந்தேகம்
Jun 6 2023 6:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 30 கோடி ரூபாய் நன்கொடை அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விபத்தையடுத்து, கோஹ்லி தனது ட்விட்டரில், ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்து குறித்து கேள்விப்பட்டு வேதனை அடைந்ததாகக் குறிப்பிட்டு இருந்தார். அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்த கோலி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டு இருந்தார். இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு விராட் கோலி 30 கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக கோஹ்லி தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார். இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லாத நிலையில், இது வதந்தியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.