சிவகங்கை அருகே நடத்தப்பட்ட மினி மராத்தான் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்பு
Jun 2 2023 2:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிங்கம்புணரி அருகே மாம்பட்டியில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களால் நடத்தப்பட்ட மினி மராத்தான் போட்டியில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே ஸ்ரீ பிரியாவிடை நயனார், பொன்னாவிடை செல்வி தீர்த்தவாரி மண்டகப்படி திருவிழாவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த மினி மராத்தான் போட்டி மாம்பட்டியில் தொடங்கி ஏரியூர் வரை சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. போட்டியில் மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்ற 70 வயது முதியவர் கலந்து கொண்டு எல்லையை அடைந்து அசத்தினார்.