கம்போடியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் இந்தியாவிற்காக தங்க பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு
Jun 2 2023 2:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கம்போடியாவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் இந்தியாவிற்காக தங்க பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவ, மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வதேச அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி கம்போடியா நாட்டின் சியாம் ரீப் நகரில் நடைபெற்றது. கடந்த 27ம் தேதி நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா, அர்ஜெண்டினா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பலர் பங்கேற்றனர். சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில் ஆர்ட்டிஸ்டிக், ரிதமிக், அத்லெட் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் கோவையை சேர்ந்த பிரபல யோகா மாணவி வைஷ்ணவியிடம் பயிற்சி பெற்ற ஆறு மாணவ, மாணவிகள் உட்பட ஏழு பேர் தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். பதக்கம் வென்று ஊர் திரும்பிய மாணவ மாணவிகளுக்கு விமான நிலையத்தில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.