முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை அணி - இறுதிப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அபாரம்
Mar 27 2023 9:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. மும்பையில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, ஷிகா பாண்டே, ராதா யாதவ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. ஷிகா பாண்டே, ராதா யாதவ் ஆகிய இருவரும் ஆட்டமிழக்காமல் தலா 27 ரன்கள் எடுத்தனர். பின்னர், 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 3 பந்துகள் மீதமிருந்த நிலையில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம், மகளிர் பிரிமீயர் லீக் சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக வென்ற அணி என்ற பெருமையை மும்பை அணி பெற்றுள்ளது.