இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2வது 20 ஓவர் போட்டி - லக்னோ மைதான பராமரிப்பாளர் பணி நீக்கம்
Jan 31 2023 4:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 2வது இருபது ஓவர் போட்டியின் மைதானம் பேசு பொருளான நிலையில், மைதான பராமரிப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிறு அன்று இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது இருபது ஓவர் போட்டி லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் எக்னா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 2 அணிகளுமே பேட்டிங்கின் போது தடுமாறியது. சுழற்பந்துக்கு மைதானம் எளிதாக இருந்ததாக இரு அணி வீரர்களும் தெரிவித்தனர். இந்நிலையில், லக்னோ மைதானம் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் லக்னோ மைதான பராமரிப்பாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். புதிய பராமரிப்பாளராக சஞ்சீவ் குமார் அகர்வால் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.