பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி - இல்லத்தரசிகள் அசத்தல் : ஏழை தொழிலாளர்கள் குடும்பத்திற்கு நிதி திரட்டும் வகையில் கிரிக்கெட் போட்டி
Jan 29 2023 5:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவையில் நடைபெற்ற பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் இல்லத்தரசிகள் அசத்தலாக ஆடி அனைவரையும் வியக்க வைத்துள்ளனர். கோவை பூசாரிபாளையத்தில் சமூகத்தில் நலிந்த மற்றும் ஏழை தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிதி திரட்டும் வகையில் சக்ரா நினைவு மற்றும் கரீப்தஸ்ஜி கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. ஆண், பெண் இரு பாலருக்கும் தனித்தனியாக கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. 4 ஓவர்கள் கொண்ட போட்டியில் 7 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த, கிரிக்கெட் போட்டியில் பெண்கள் ஆர்வமுடன் விளையாடி அனைவரையும் வியக்க வைத்தனர்.