சேலம் மாவட்டம் மேட்டூரில் தொடர்ச்சியாக 2 மணி நேரம் சிலம்பம் சுழற்றிய சிறுவர்-சிறுமிகள்
Jan 29 2023 3:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தனி மனித ஒழுக்கத்தை வலியுறுத்தி உலக சாதனைக்காக சிறுவர் சிறுமிகள் தொடர்ச்சியாக 2 மணி நேரம் சிலம்பம் சுழற்றியும், திருக்குறள் வாசித்தும் அசத்தினர். ஜலகண்டாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குளோபல் வேல்டு ரெகார்ட் மற்றும் ஜலகண்டாபுரம் சிலம்பாட்டம் நற்பணி சங்கம் சார்பில் உலக சாதனைக்காக சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தனி மனித ஒழுக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் கலந்துகொண்டு ஒழுக்கம் விழுப்பம் தரலாம் என்ற திருக்குறளை வாசித்தபடியே தொடர்ச்சியாக 2 மணி நேரம் சிலம்பத்தை சுழற்றி அசத்தினர்.