மகளிர் ஜுனியர் டி-20 உலகக் கோப்பை - மகுடம் சூடுமா இந்தியா? - இறுதிப்போட்டியில் இங்கி. அணியுடன் இன்று மோதல்
Jan 29 2023 2:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகளிர் ஜுனியர் உலகக் கோப்பை டி-20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் இந்தியநேரப்படி இன்று மாலை 5.15 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இத்தொடரில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகளின் பட்டியலில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்வேதா ஷெராவத், மொத்தம் 292 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். இதேபோல், பந்துவீச்சிலும் பார்ஷவி சோப்ரா, மன்னட் காஷ்யப் ஆகியோரும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழ்கின்றனர். இதனால் இன்றைய இறுதிப் போட்டியில், ஷஃபாலி வர்மா தலைமையிலான இந்திய மகளிர் அணி, இங்கிலாந்தை வீழ்த்தி மகுடம் சூடுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.