இந்தியாவுக்கு எதிரான முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி : வாஷிங்டன் சுந்தர், சூர்யகுமாரின் போராட்டம் வீண்
Jan 28 2023 11:15AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவுக்கு எதிரான முதல் இருபது ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. ராஞ்சியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள், சிறப்பான தொடக்கத்தை கொடுத்னர். ஆலன் 35 ரன்கள், கான்வே அரைசதம் அடித்தார். கடைசி கட்டத்தில் தனது அதிரடியை காட்டிய டேரில் மிட்சேல் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி ஸ்கோரை உயர்த்தினார். இறுதியில் அந்த அணி 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பின்னர் சூர்யகுமார் கேப்டன் பாண்டியாவுடன் இணைந்து ரன்களை குவித்தார். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் 47 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 21 ரன்னிலும் வெளியேறினர். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் ஆன நிலையில் இறுதிகட்டத்தில் அதிரடியாக ஆடிய வாஷிங்டன் சுந்தர் 28 பந்துகளில் 50 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.