2022ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் சூர்ய குமார் யாதவ் தேர்வு - கடந்த ஆண்டு 31 போட்டிகளில் விளையாடி 1,164 ரன்கள் குவித்ததன் அடிப்படையில் தேர்வு செய்தது ஐசிசி
Jan 25 2023 5:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2022ம் ஆண்டிற்கான சிறந்த டி-20 வீரராக இந்தியாவின் சூர்யகுமார் யாதவை ஐசிசி தேர்வு செய்துள்ளது. கடந்த ஆண்டில் 31 போட்டிகளில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 1164 ரன்களை குவித்துள்ளார். 187.43 என்ற ரன் விகிதத்துடன் 46.56 சராசரி கொண்ட சூர்யகுமார் யாதவ் சிறந்த டி-20 வீரராக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. டி-20 வரலாற்றில் ஒரே ஆண்டில் 68 சிக்சர்களை பறக்கவிட்டு ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனைக்கும் சூர்யகுமார் யாதவ் சொந்தக்காரர் ஆவார். கடந்த ஆண்டில் இரண்டு சதங்களையும், ஒன்பது அரை சதங்களையும் சூர்யகுமார் யாதவ் அடித்துள்ளார்.