நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி - தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தல்
Jan 25 2023 10:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரையும் முழுமையாகக் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் குவித்தது.
கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் அதிரடியாக விளையாடி சதம் விளாசினர். 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 41 புள்ளி 2 ஓவரில் 295 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்திய தரப்பில் ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.