2022ம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் டி-20 அணி அறிவிப்பு : அதிகபட்சமாக இந்திய அணியில் இருந்து 3 வீரர்கள் தேர்வு
Jan 23 2023 4:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2022ம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் இருபது ஓவர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை கொண்ட ஒருநாள், டி-20, டெஸ்ட் அணிகளை அறிவிக்கும். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டுக்கான சிறந்த 11 வீரர்களை கொண்ட டி20 அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக இந்தியாவில் இருந்து 3 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணியில் இருந்து 2 வீரர்களும், பாகிஸ்தான் அணியில் இருந்து 2 வீரர்களும், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, இலங்கை, அயர்லாந்து அணிகளில் இருந்து தலா 1 வீரரும் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய அணியில் இருந்து விராட் கோலி, ஹர்த்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகிய 3 வீரர்கள் தேர்வாகி உள்ளனர்.