உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி : ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று உற்சாகம்
Jan 22 2023 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தன் போட்டி நடைபெற்றது. உடல் ஆரோக்கியம் மற்றும் விளையாட்டு துறையில் பங்கேற்பது தொடர்பாகவும், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் என இரண்டு வெவ்வேறு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. இதில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.