ரோகித் சர்மாவிற்கு பெருவிரலில் பந்து தாக்கி பலத்த காயம் : பிசிசிஐ-யின் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
Dec 7 2022 5:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ரோஹித் சர்மாவிற்கு பெரு விரலில் பலத்த காயம் ஏறட்டுள்ளது. இரண்டாவது ஓவரை சிராஜ் வீசிய போது, ஸ்லிப்பில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ரோகித் பந்தை கேட்ச் பிடிக்க முயன்றார். அப்போது பந்து பெருவிரலை தாக்கி ரத்தம் சொட்டியது. உடனடியாக மைதானத்தில் இருந்து ரோகித் சர்மா வெளியேறினார். ரோகித்திற்கு சிகிச்சையளிக்கப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது பிசிசிஐ-மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய அணியின் சார்பாக அவர் பேட்டிங் செய்ய வாய்ப்பு இல்லை. அவருக்கு பதிலாக ரஜத் படிதார் பீல்டிங் செய்தார்.