இந்தியா-வங்கதேசம் இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இந்திய நேரப்படி நாளை காலை 11.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது
Dec 6 2022 7:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, நாளை நடைபெறுகிறது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரோஹித் சர்மா தலைமயிலான இந்திய அணி, தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் வங்கதேச அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால், 1-0 என்ற கணக்கில் வங்கதேசம் முன்னிலையில் உள்ள நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது போட்டி, மீண்டும் மிர்பூரில் நடைபெறுகிறது. இந்தியநேரப்படி நாளை காலை 11.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் வங்கதேச அணியும், தொடரை இழக்காமல் இருக்க வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியும் களமிறங்கவுள்ளது. இதனால், இப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.