உலகக்கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்- தென்கொரியாவை 4க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபாரம்
Dec 6 2022 11:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தென் கொரியாவை வீழ்த்தி பிரேசில் அணி காலிறுதிக்கு முன்னேறியது. தோகாவில் உள்ள ராஸ் அபு அபவுத் ஸ்டேடியத்தில் நடந்த நாக் அவுட் சுற்றில் பிரேசில், தென் கொரியா அணிகள் மோதின.ஆரம்பம் முதலே பிரேசில் வீரர்கள் அதிரடியாக ஆடினர். முதல் பாதியில் பிரேசில் வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். வினி ஜூனியர் 7-வது நிமிடத்திலும், நெய்மர் 13-வது நிமிடத்திலும், ரிச்சர்லிசன் 29-வது நிமிடத்திலும், லூகாஸ் பகியூடா 39வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.
இதனால் முதல் பாதியில் பிரேசில் அணி 4க்கு0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியின் 76-வது நிமிடத்தில் தென் கொரியாவின் பெய்க் சியூங் ஒரு கோல் அடித்தார். இறுதியில், பிரேசில் அணி 4-1 என்ற கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.