வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அடைந்த தோல்விக்கு எவ்வித சாக்குபோக்கும் சொல்ல முடியாது - இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கருத்து
Dec 5 2022 12:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அடைந்த தோல்விக்கு எவ்வித சாக்குபோக்கும் சொல்ல முடியாது என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். மிர்பூரில் போட்டிக்குப் பின் தோல்வி குறித்து பேசிய ரோஹித் சர்மா, இந்த போட்டியில் இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு இருந்ததாகக் கூறினார். இந்திய அணி எடுத்த 186 ரன்கள் போதுமானது இல்லை என்று கூறிய அவர், இப்போட்டியில் நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்யாத போதிலும் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே செயல்பட்டதாகத் தெரிவித்தார். கூடுதலாக 25 முதல் 30 ரன்கள் எடுத்திருந்தால் நிச்சயம் வெற்றிபெற்றிருப்போம் என்று தெரிவித்த ரோஹித் சர்மா, இந்த மாதிரியான ஆடுகளங்களில் இந்திய வீரர்கள் விளையாடி பழக்கப்பட்டவர்கள் என்பதால், தோல்விக்கு எந்தவித சாக்குபோக்கும் சொல்ல முடியாது என்றும் கூறினார்.