உலக கோப்பை கால்பந்துப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் கானாவை வீழ்த்தியது போர்ச்சுகல் - 5 உலக கோப்பை போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த ரொனால்டோ
Nov 25 2022 12:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக கோப்பை கால்பந்து போட்டியில் கானாவை போர்ச்சுக்கல் அணி வென்ற நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அடித்த கோல் மூலம் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல்- கானா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 30-வது நிமிடத்தில் போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ கோல் அடித்தார். ஆனால் அது ஏற்கப்படவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் கோல்களின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் 5 உலக கோப்பை தொடர்களிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார். தொடர்ந்து கானா அணி 2 கோல்கள் அடித்தாலும், இறுதியில் 3க்கு 2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் வெற்றி பெற்றது.