இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் டி-20 கிரிக்கெட் போட்டி : போட்டியில் வென்று தொடரை வெல்லுமா இந்தியா?
Oct 2 2022 3:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான டி-20 தொடர் கடந்த 28 ஆம் தேதி முதல் தொடங்கியது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த முதல் டி-20 ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை வெல்லலாம் என்ற முனைப்பில் இந்திய அணியும், தொல்வியை தவிர்க்க தென்ஆப்பிரிக்க அணியும் போராடும் என்பதால் இன்றையப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.