இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட பயங்கர கலவரம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 174 ஆக அதிகரிப்பு
Oct 2 2022 2:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட கலவரத்தில் 174 பேர் உயிரிழந்தனர்.
மலாங் என்ற பகுதியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் அரீமா அணியும், பெர்செபயா சுரபயா அணியும் மோதின. இதில் ஒரு அணியின் வெற்றியை ஏற்க முடியாத மற்றொரு அணியின் ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர். மேலும், ரசிகர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். பின்னர், ரசிகர்களை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசியதால் ஏற்பட்ட கூட்டநேரிசலில் சிக்கி தற்போது வரை 174 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.