வங்கதேசத்தில் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் : இந்தியா - இலங்கை இன்று மோதல்
Oct 1 2022 11:06AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.
மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் 2004-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 7 தொடர்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் இந்தியா 6 முறை பட்டம் வென்றுள்ளது. 2012-ம் ஆண்டு முதல் இந்தத் தொடர் T20 வடிவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகளிருக்கான ஆசிய கோப்பை T20 கிரிக்கெட் தொடர், இந்த ஆண்டு, வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா-இலங்கை அணிகள் பிற்பகல் 1 மணிக்கு மோதுகின்றன. இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, இலங்கை, மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம் ஆகிய 7 அணிகள் பங்கேற்றுள்ளன. ரவுண்ட் ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் மோதும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். அரை இறுதி ஆட்டங்கள் 13-ம் தேதியும், இறுதிப் போட்டி 15-ம் தேதியும் நடைபெறுகின்றன.