36-வது தேசிய விளையாட்டுப் போட்டி : பளுதூக்குதல் பிரிவில் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தல்
Oct 1 2022 10:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத்தில் நடைபெற்று வரும் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டியின் பளுதூக்குதல் பிரிவில் மீராபாய் சானு தங்கம் வென்றார்.
குஜராத் மாநிலத்தில் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த மீராபாய் சானு, பெண்களுக்கான 49 கிலோ எடைப் பிரிவில் இவர் மொத்தம் 191 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார். இந்த பிரிவில் சஞ்சிதா சானு வெள்ளிப் பதக்கமும், ஒடிசாவின் ஸ்னேகா சோரன் வெண்கலப் பதக்கமும் வென்றனர். சமீபத்தில் நடந்த பயிற்சியின்போது தனது இடது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு மேலும் பிரச்சனை வராமல் பார்த்துக்கொண்டதாகவும் மீராபாய் சானு கூறினார். தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மணிப்பூரின் பிரதிநிதியாக பங்கேற்றது பெருமையான தருணம் என மீராபாய் சானு கூறினார்.