36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத்தில் தொடக்கம்- கணகவர் நிகழ்ச்சிகளுடன் போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
Sep 30 2022 12:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
36-வது தேசிய விளையாட்டு போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் தொடங்கி வைத்தார்.
அனைத்து மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் 36-வது தேசிய விளையாட்டு போட்டிகள் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நேற்று தொடங்கியது. அக்டோபர் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன இந்த போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய மைதானத்தில் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வு நடைபெறுகிறது என்றார். 8 ஆண்டுகளுக்கு முன்பு 100 சர்வதேச போட்டிகளில் மட்டுமே இந்திய தடகள வீரர்கள் பங்கேற்றனர் என்றும் ஆனால், தற்போது 300 சர்வதேச போட்டிகளில் பங்கேற்கிறார்கள் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.