இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து இந்திய வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா காயம் காரணமாக விலகல் - 4 முதல் 6 மாதங்களுக்கு ஓய்வு எடுப்பார் என தகவல்
Sep 30 2022 7:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகவுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்த பும்ரா, முதல் டி20 ஆட்டத்தில் இடம்பெறவில்லை. இந்நிலையில் சமீபகாலமாக அவருக்குத் தொந்தரவு தரும் முதுகு வலி மீண்டும் ஏற்பட்டதையடுத்து டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பும்ரா விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று அதன் முடிவுகள் வந்த பிறகு பும்ராவின் நிலை பற்றி பிசிசிஐ அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர், மாத காலம் வரை ஓய்வு எடுக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என கூறப்படுகிறது. காயம் காரணமாக ஜடேஜா விலகிய நிலையில் அடுத்ததாக பும்ராவும் விலகவுள்ளதாகச் செய்தி வெளியாகியிருப்பது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.