சென்னை தாம்பரத்தில் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டு விழா : புதுச்சேரி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்பு

Sep 29 2022 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை தாம்பரத்தில் சர்வதேச செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.

தமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரரான பிரக்ஞானந்தா சர்வதேச அளவில் ஏராளமான வெற்றிகளை குவித்து வருகிறார். இந்த இளம் வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் பெற்றுள்ளார். அண்மையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் அவர் வெற்றி பெற்றதை பாராட்டி, சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரக்ஞானந்தாவுக்கு சதுரங்க சாதுர்ய விருதும், ஒரு லட்சம் ரூபாய் பணமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் பேசிய பிரக்ஞானந்தா, எந்த ஒரு பணியில் ஈடுபட்டாலும் முழு முயற்சியுடனும், ஈடுபாட்டுடனும் செயல்பட வேண்டும் என கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00