தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி : இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
Sep 29 2022 7:17AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி, இரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி, திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, அர்ஷ்தீப்பின் அபாரமான பந்துவீச்சால் திணறியது. ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய அணியில், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்திய அணி 16 புள்ளி 4 ஓவரில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி, இந்த தொடரில் 1-க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.