ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி - 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி

Sep 26 2022 7:00AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஆரோன் பின்ச் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் களமிறங்கினர். ஒருபுறம் பின்ச் நிதானத்தை கடைபிடிக்க, மறுபுறமோ கிரீன் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டார். 19 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் 52 ரன்னில் அவுட்டானார். அவரைத்தொடர்ந்து பின்ச் 7 ரன்களிலும், ஸ்டீவ் சுமித் 9 ரன்களிலும், மேக்ஸ்வெல் 6 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அணியை டிம் டேவிட் சரிவில் இருந்து மீட்டார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 3 விக்கெட்டுகளும், புவனேஸ்வர்குமார், சாஹல் மற்றும் ஹர்சல் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். கே.எல்.ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், அவரைத்தொடர்ந்து ரோகித் சர்மாவும் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக விராட் கோலியுடன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ரன்களை குவித்ததால் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் தனது அரைசதத்தை பூர்த்தி செய்திருந்த நிலையில், 69 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 37 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அடுத்து இணைந்த விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா ஜோடி, வேகமாக ரன்களை குவிக்கத் தொடங்கியது. வெற்றிபெற கடைசி ஒவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் விராட் கோலி முதல் பந்தில் சிக்சர் அடித்து, அடுத்த பந்தில் கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா பவுண்டரி அடித்து அணியை வெற்றிபெற செய்தார். இறுதியில் தினேஷ் கார்த்திக் 1 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 25 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இந்திய அணி 19.5 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00