இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டி-20 போட்டி - ஹைதராபாத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெல்லப்போவது யார்? என ரசிகர்கள் எதிர்பார்ப்பு
Sep 25 2022 11:03AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டி ஹைதராபாத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கும். இதனால் இன்றையப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.