இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி - நாக்பூரில் இன்று மீண்டும் மோதல்
Sep 23 2022 11:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. மொகாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 208 ரன்கள் குவித்தும் வெற்றி பெற முடியவில்லை. எனவே, பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கை சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. ஆஸ்திரேலிய அணி இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் உத்வேகத்துடன் உள்ளது. அதேவேளையில் இந்திய அணி பதிலடி கொடுக்க வரிந்து கட்டும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.