இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை - ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு
Sep 22 2022 2:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க ஹைதராபாத் மைதானத்தில் ஏராளமானோர் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பலியானார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே வரும் 25-ம் தேதி, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியை காண்பதற்கான டிக்கெட், ஜிம்கானா விளையாட்டு மைதானத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இன்று காலை டிக்கெட்டை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் டிக்கெட் வாங்க வந்த பெண் ரசிகைகள் பலர் காயம் அடைந்த நிலையில், ஒருவர் உயிரிழந்தார்.
டிக்கெட் வாங்கவந்த ரசிகர்களின் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.