இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் - ஹராரேயில் இன்று தொடக்கம்
Aug 18 2022 7:09AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது.
கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. அதன்படி, இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று பிற்பகல் 12.45 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்று இருந்தது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகள் இடையே ஒருநாள் போட்டி நடைபெறுவதால் தொடரை வெல்லப் போவது யார்? என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணியில் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், வீராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோரில் ஒருவர் விக்கெட் கீப்பராக பணியாற்றுவர். வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்ததால் அவருக்கு பதிலாக ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டு உள்ளார்.