கோடை சீசனை முன்னிட்டு உதகையில் நடைபெற்ற படகு போட்டி - வெற்றி பெற்ற சுற்றுலா பயணிகளுக்கு பரிசுகள்

May 20 2022 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோடை சீசனை முன்னிட்டு உதகை படகு இல்லத்தில் ந​டைபெற்ற படகு போட்டிகளில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் தற்போது கோடை சீசன் களைகட்டியுள்ளது. இதனால் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக உதகையில் உள்ள படகு இல்லத்தில் தமிழக சுற்றுலா துறை சார்பாக படகு போட்டி நடத்தப்பட்டது. சுற்றுலா பயணிகளை உற்சாகபடுத்தும் வகையில் ஆண்கள், பெண்கள், தம்பதியினர், படகு இல்ல ஊழியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என 5 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளை மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு. உமா சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட சுற்றுலா பயணிகள் கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் பங்கேற்று வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00