உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை நிகாத் ஸரீன்- இறுதிப்போட்டியில் தாய்லாந்து வீராங்கனையை வென்று அபாரம்
May 20 2022 12:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை நிகாத் ஸரீன் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
12-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான 52 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் தாய்லாந்து வீராங்கனை ஜித்போங்கை இந்திய வீராங்கனை நிகாத் ஸரீன் எதிர்கொண்டார். இதில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகாத் ஸரீன் , 5-0 என்ற கணக்கில் ஜித்போங்கை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஐந்தாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை நிகாத் ஸரீன் பெற்றுள்ளார். தெலங்கானாவை சேர்ந்த நிகாத் ஸரீன் , கடந்த 2019-ம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தார்.