தாமஸ் கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய அணி வீரர் சிராக் ஷெட்டி பேட்டி
May 19 2022 4:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வரலாற்று சிறப்புமிக்க தாமஸ் கோப்பை பேட்மின்டன் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதல் முறையாக இந்தக் கோப்பையை வென்றது, வீரர்களை மட்டுமின்றி ரசிகர்களையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா திரும்பிய மும்பை வீரர் சிராக் ஷெட்டியும், அணியின் வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மற்ற போட்டிகளில் பெற்ற வெற்றியை இதுபோன்று உணரவில்லை என குறிப்பிட்ட அவர், இது உண்மையில் ஒரு பெரிய வெற்றி என பெருமிதம் தெரிவித்தார். இதற்கு முன்பு, நாங்கள் தாமஸ் கோப்பையில் இந்தியா பெரிதாக எதையும் சாதிக்கவில்லை என்றும், இந்த முறை நாங்கள் வெற்றிபெற அதிக உத்வேகத்துடன் இருந்தோம் என அவர் கூறினார்.