சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயம் - இந்திய வீராங்கனை ஜோதி யாராஜி தங்கப் பதக்கம் வென்று புதிய உலக சாதனை
May 12 2022 11:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யாராஜி தங்கப் பதக்கம் வென்று புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
சைப்ரஸ் நாட்டில் சர்வதேச தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்ட இந்திய வீராங்கனை ஜோதி யாராஜி, மின்னல் வேகத்தில் செயல்பட்டு 13.23 விநாடிகளில் பந்தய இலக்கை கடந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். முன்னதாக 2002 ஆம் ஆண்டில் இந்திய வீராங்கனை அனுராதா பிஸ்வால் 13.38 விநாடிகளில் இந்த இலக்கை கடந்ததே உலக சாதனையாக இருந்தது. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு அந்த சாதனையை முறியடித்து, ஜோதி யாராஜி புதிய உலக சாதனை படைத்துள்ளார். மேலும், இந்தப் போட்டியில் சைப்ரஸ் வீராங்கனை நட்டாலியா வெள்ளிப் பதக்கமும், கிரீஸ் வீராங்கனை Anais வெண்கலப் பதக்கமும் வென்றனர். புதிய உலக சாதனை படைத்துள்ள ஜோதி யாராஜிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.