ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டம் - 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி
May 11 2022 11:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின்ல் லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றிப்பெற்றது.
மும்பையில் நேற்று நடைபெற்ற 57-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் ஆடிய குஜராத் அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்களை சேர்ந்தது. பின்னர், 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, 13 புள்ளி 5 ஓவர்கள் முடிவில் 82 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால், 62 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றிப்பெற்றது.