ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கேப்டனாக 6 ஆயிரம் ரன்களை கடந்தார் எம்.எஸ்.தோனி - சாதனை பயணத்தில் மற்றொரு மைல்கல்லை நாட்டிய ரசிகர்களின் நாயகன்
May 9 2022 12:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஒரு கேப்டனாக எம்.எஸ்.தோனி ஆறாயிரம் ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் 18வது ஓவரில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, மொத்தம் 8 பந்துகளை மட்டுமே சந்தித்தார். அதில் தன் பங்கிற்கு இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியை விளாசி 21 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஒரு கேப்டனாக மகேந்திர சிங் தோனி ஆறாயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். அதேபோல், டெத் ஓவர்களில் முதல் வீரராக தோனி 2 ஆயிரத்து 500 ரன்களை கடந்துள்ளார். தோனியின் இந்த சாதனையை குறிப்பிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.