மாநில அளவிலான வாலிபால் போட்டி: திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அணி வெற்றி
May 8 2022 5:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியின் முதலாவது போட்டியில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அணி வெற்றி பெற்றது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட வாலிபால் சம்மேளனம் நடத்தும் மாநில அளவிலான வாலிபால் போட்டிகள் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தொடங்கியது. பகல் இரவாக நடைபெறும் இப்போட்டிகளை திருச்சி மத்திய மண்டல ஐஜி திரு. பாலகிருஷ்ணன் பங்கேற்று தொடங்கிவைத்தார். ஆடவர் மற்றும் மகளிருக்கான மாநில அளவிலான இப்போட்டியில் அழைப்பிதழ் முறையில் திருச்சி, கோவை, சென்னை, சேலம், தஞ்சை, மதுரை, அரியலூர், மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து தலைசிறந்த 12 வாலிபால் அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் முதலாவது போட்டியில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அணி மதுரை அமெரிக்கன் கல்லூரி அணியை வீழ்த்தியது. போட்டிகளை ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.