இந்திய கிரிக்கெட் வீரர் சாஹாவை விமர்சித்த விவகாரம் - பத்திரிகையாளர் போரியா மஜும்தாருக்கு, இரண்டு ஆண்டுகள் தடைவிதித்தது பி.சி.சி.ஐ
May 4 2022 4:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய கிரிக்கெட் வீரர் விருத்தமான் சாஹாவை விமர்சித்த விவகாரத்தில் பத்திரிகையாளருக்கு இரண்டு ஆண்டுகள் பிசிசிஐ தடை விதித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான விருத்திமான் சாஹா, கடந்த மாதம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தொடரில் அணியில் இடம்பிடிக்கவில்லை. இதுதொடர்பாக பிசிசிஐ நிர்வாகம் மற்றும் இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் குறித்து அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் பத்திரிகையாளர் ஒருவரும் தன்னை விமர்சித்ததாக விருத்தமான் சாஹா குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக பிசிசிஐ விசாரணை நடத்தி வந்தது. மேலும் சாஹாவை விமர்சித்தது விளையாட்டு பத்திரிகையாளர் போரியா மஜும்தார் என்பவர் தான் என்பது தெரியவந்தது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் விருத்தமான் சாஹாவை விமர்சித்த விவகாரத்தில் பத்திரிகையாளருக்கு இரண்டு ஆண்டுகள் பிசிசிஐ தடை விதித்துள்ளது. இதன்மூலம் போரியா மஜூம்தாரால் இரண்டு ஆண்டுகளுக்கு கிரிக்கெட் குறித்து எந்ததொரு செய்தி வெளியிடவும், கிரிக்கெட் மைதானம், பத்திரிகையாள் சந்திப்பில் பங்கேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.