ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி - அகமதாபாத் மைதானத்தில் 27-ம் தேதி நடக்குமென பிசிசிஐ அறிவிப்பு
May 4 2022 8:09AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வரும் 27-ம் தேதி அகமதாபாத்தில் நடக்குமென பிசிசிஐ தெரிவித்துள்ளது.
15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மும்பை மற்றும் புனே நகரங்களில் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக 50 சதவீத பார்வையாளர்களுடன் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிளே-ஆப் மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும் மைதானங்களின் விவகரங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, பிளே-ஆப் போட்டிகள் கொல்கத்தா மற்றும் அகமதாபாத் மைதானங்களில் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் தகுதிச்சுற்று போட்டி வரும் 24-ம் தேதியும், எலிமினேட்டர் சுற்றுப் போட்டி 25-ம் தேதியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. 2-வது தகுதிச் சுற்று போட்டி வரும் 26-ம் தேதியும், இறுதிப் போட்டி 27-ம் தேதியும் அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறுகிறது.