மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணிக்கு விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக நியமனம்
May 2 2022 6:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட்டில், 20 பேர் கொண்ட இந்திய அணிக்கு, விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வரும் ஜுலை மாதம் 28ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டிக்கான 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் ஆலோசகராக விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளதாக, அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. Vidit Gujrathi, Pentala Harikrishna, சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணன் சசிகரன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மகளிர் அணியில் Koneru Humpi, Harika Dronavalli, Tania Sachdev உள்ளிட்ட பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். 14 நாட்கள் நடைபெறும் இந்த செஸ் போட்டியில், உலகின் 150 நாடுகளைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.