இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் - பார்வையாளர்கள் இன்றி மும்பை மற்றும் புனேவில் நடத்த பி.சி.சி.ஐ திட்டம்
Jan 23 2022 10:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக மும்பை மற்றும் புனேவில் பார்வையாளர்கள் இன்றி ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ நடத்த முடிவு செய்துள்ளது.
2022-ம் ஆண்டிற்க்கான ஐபிஎல் போட்டிகளை எங்கு நடத்துவது என்பது குறித்து அனைத்து ஐபிஎல் அணிகளுடனான ஆலோசனைக்கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தியாவில் மட்டுமே ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டுமென பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஐக்கியஅரபு நாடுகளில் போட்டிகளை நடத்தலாம் எனவும் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது மும்பை மற்றும் புனேவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் எனவும், வருகிற மார்ச் 27-ம் தேதி இந்த போட்டிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.