திருச்சி திருவெறும்பூர் அருகே நடைபெறும் ஜல்லிக்கட்டு - சீறிப் பாயும் காளைகள் : களமாடும் இளைஞர்கள்
Jan 21 2022 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் கூத்தப்பார் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தப்பாரில், நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு போட்டியில், 400 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். மாடுபிடி வீரர்கள், உறுதிமொழி ஏற்று கொண்ட பின், வாடிவாசலில் காளைகளை அடக்க களமிறங்கினர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், மருத்துவ பரிசோதனைக்கு பிறகே, வாடிவாசலில் அனுமதிக்கப்பட்டன. இதேபோல், மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 3 பிரிவுகளாக களமிறங்குகின்றனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, மாடுபிடி வீரர்கள், போட்டி போட்டுக்கொண்டு அடக்கினர்.
ஜல்லிக்கட்டு போட்டியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க, காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக வெளியூர் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பார்வையாளர்கள் மட்டும் சுழற்சி முறையில், ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்து வருகின்றனர்.