உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி -தென்கொரிய வீராங்கனையை எதிர்கொள்கிறார் இந்தியாவின் பி.வி.சிந்து
Dec 5 2021 11:15AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டியில் தென் கொரிய வீராங்கனையை இந்தியாவின் பி.வி.சிந்து இன்று எதிர்கொள்கிறார்.
உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி இந்தோனேஷியாவில் உள்ள பாலி நகரில்
நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, சிறப்பாக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து, ஜப்பானின் அகானே யமகச்சியை எதிர்கொண்டார். அகானேயின் அதிரடி ஆட்டத்தை எதிர்கொண்ட சிந்து, 21-15, 15-21, 21-19 என்ற செட்கணக்கில்
வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். பி.வி. சிந்து, தென் கொரிய வீராங்கனையான ஆன் சியங்கை எதிர்த்து, இன்று நடைபெறும் இறுதி போட்டியில் விளையாடுகிறார்.