மும்பையில் இன்று தொடங்கும் இந்தியா - நியூஸிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் - மழை பாதிப்பு காரணமாக போட்டி நண்பகல் 12 மணிக்குத் தொடங்கும் என அறிவிப்பு
Dec 3 2021 11:49AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பை வான்கடே மைதானத்தில் நிலவும் ஈரப்பதம் காரணமாக, இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் சற்று தாமதாமாக நண்பகல் 12 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இப்போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்க இருந்த நிலையில், நேற்று இரவு பெய்த மழையால் மைதானம் ஈரமாக உள்ளது. இதனால் திட்டமிட்டபடி போட்டி தொடங்கவில்லை. சற்றுமுன் 2-வது முறையாக மைதானத்தை பார்வையிட்ட நடுவர்கள், நண்பகல் 12 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவித்துள்ளர். 11.30 மணிக்கு டாஸ் போடப்படவுள்ளது.
இந்த நிலையில், இந்தப்போட்டியில் இரு அணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல் டெஸ்ட்டின் போது, இந்திய அணியில் விளையாடாமல் இருந்த கேப்டன் விராத் கோலி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். ஆல்ரவுண்டர் ஜடேஜா, துணைக் கேப்டன் ரஹானே, வேகப்பந்து வீச்சாளர் ஆகியோர் காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறவில்லை. இதேபோல் நியூசிலாந்து அணியின் கேப்டன் Kane Williamson-னும் காயம் காரணமாக இப்போட்டியிலிருந்து விலகியுள்ளார்.