இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம் - ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
Oct 19 2021 7:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
அபுதாபியில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கே.எல் ராகுல் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். அதிரடியாக ஆடிய கே.எல் ராகுல், 24 பந்துகளில் 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய இஷான் கிஷன், 46 பந்துகளில் 70 ரன்கள் குவித்த நிலையில் ரிட்டேட் ஹர்ட் முறையில் வெளியேறினார். 19 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்த இந்திய அணி, முதல் பயிற்சி ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக நடைபெற்ற நமீபியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில், இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.