விருதுநகர்: ராஜபாளையத்தில் ஆண்களுக்கான பளு தூக்கும் போட்டி - 35 பேர் பங்கேற்பு

Oct 18 2021 6:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஜபாளையத்தில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் 35 பேர் கலந்து கொண்டு, தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செயல்படும் தனியார் உடற்பயிற்சி நிலைய நிர்வாகம் சார்பில் ஆண்களுக்கான பளு தூக்கும் போட்டிகள் நடைபெற்றது. நகராட்சி அலுவலகம் அருகே உள்ள உடற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெற்ற போட்டிகளில் தளவாய்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையத்தில் இயங்கும் 6 உடற்பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த 35 பேர் பங்கேற்றனர். இதில் ராஜபாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ் குமார் என்பவர் 210 கிலோ எடையை தூக்கி, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார். முடிவில் 98 வயதான மூத்த பளு தூக்கும் கலைஞர் மாடசாமி 40 கிலோ எடையை தூக்கி போட்டியை நிறைவு செய்தார். போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00