ஐ.பி.எல் கிரிக்கெட்டில் 4-வது முறையாக சென்னை அணி சாம்பியன் - ஆழ்கடலில் கிரிக்கெட் விளையாடி சென்னை அணிக்கு நூதன வாழ்த்து
Oct 16 2021 11:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 4-வது முறையாக கோப்பையை வென்ற சென்னை அணிக்கு, நள்ளிரவில் ஆழ்கடலில் கிரிக்கெட் விளையாடி, நூதன முறையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நான்காவது முறையாக கோப்பையை வென்றது. இந்த வெற்றியை உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, ஆழ்கடல் பயிற்சியாளர் அரவிந்தன் தலைமையிலான குழுவினர், சென்னை நீலாங்கரையில் ஆழ்கடலுக்குள் மணலில் ஸ்டம்ப் அடித்து கிரிக்கெட் விளையாடி தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். நள்ளிரவில் நடுக்கடலில் மின் ஒளியில், பாதுகாப்பு கவசங்களுடன் பேட்டிங், பௌலிங், ஸ்டெம்பிங் என வீரர்கள் விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நூதன முறையில் வாழ்த்து தெரிவித்தனர்.
கோப்பையை வென்ற சென்னை அணியை வாழ்த்தி, நள்ளிரவில் நடுக்கடலில் மின் ஒளியில் கிரிக்கெட் விளையாடியது, கிரிக்கெட் ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.