விருதுநகர்: ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து இறுதிப்போட்டி
Oct 16 2021 11:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், மாவட்ட அளவிலான சிவந்தி ஆதித்தனார் நினைவு கோப்பை கைப்பந்து இறுதிப் போட்டியை, விருதுநகர் மத்திய மாவட்டச் செயலாளர் பயில்வான் கே.எஸ். சந்தோஷ்குமார் தொடங்கி வைத்தார். இதில், ராஜபாளையம் நகர கைப்பந்து கழக A அணியும், ராஜபாளையம் 11-ம் சிறப்பு காவல் படை காவலர் அணியும் மோதின. இறுதியில் வெற்றி பெற்ற ராஜபாளையம் நகர கைப்பந்து கழக A அணிக்கு, கோப்பையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.